Sunday, 7 September 2014

அமர காவியம்- விமர்சனம்

dfg 
இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஓர் உண்மை கலந்த காதல் கதையின் சம்பவத்தை அமர காவியம் திரைப்படத்தில் வருணித்திருக்கிறார் ஜீவாசங்கர்.

ஊட்டி கார்மெண்டில் படிக்கும் நாயகன் சத்யாவின் நண்பன் அதே கார்மெண்டில் படிக்கும் நாயகி மியாவை காதலித்துவருகிறார், மியாவும் இவர்களை கடந்து செல்லும்போது சத்யாவின் நண்பன் தன்னை தான் பார்த்து சிரித்துவிட்டு செல்கிறால் தன்னைத்தான் காதலிக்கிறார் என்ற தவறான எண்ணமும் கொள்கிறார்.
காதலை மியாவிடம் வெளிப்படுத்த தயங்கி சத்யாவை வைத்து தன் காதலை சொல்ல அனுப்புகிறார், சத்யா தன் நண்பனின் காதலை மியாவிடம் தெரிவிக்கும் போது நான் உண்ணை தான் காதலிக்கிறேன் என்று ஊட்டியின் வெண்பனியில் பூக்கின்ற மலரைப்போல் அழகான முறையில் வெளிப்படுத்தியுள்ளார் மியா.அந்த அழகான வெண்பனியிலிருந்து இவர்களுடைய காதல் கதையும் ஆரம்பமாகிறது. ஒரு காலகட்டத்தில் இவர்களுடைய விஷயம் தாறுமாரான முறையில் வீட்டிற்க்கு தெரியவருகிறது. இதனால் காதலியின் வீட்டார்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் சத்யாவை மனஅழுத்ததிற்கு தள்ளப்படுகிறார். தன் காதலி மேல் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பினால் செய்யும் ஒவ்வொரு காரியமும் பைத்தியகாரன் என்ற எண்ணம் அனைவரின் மனதில் தோன்றவைத்துள்ளது. இதுமட்டுமல்ல காதலியோ தன் காதலன் பைத்தியகாரன் என்று நம்பும் அளவுக்கு நண்பன் செய்யும் துரோகங்கள் ஏராலம். எதார்த்த வகையில் இவனுடைய நாடகம் அம்பலமாயின. இறுதியில் காதல் ஊட்டியின் சிகரம் போல் உயர்ந்து நின்றதா ?? இல்லை ஆழ்ந்த பல்லத்தில் சரிந்ததா ?? என்பதே மீதி கதை……….

படத்தின் பின்னனி இசையமைப்பாளர் ஜிப்ரனின் இசை பாராட்டத்தக்கது. ஆகமொத்தம் அமர காவியம் படத்தின் படைப்பிற்கு ஜீவா சங்கருக்கு வாழ்த்துக்கள்….

0 comments:

Post a Comment